திருப்பூர்

உணவு பரிமாற மறுத்த மனைவிக்கு அரிவாள் வெட்டு: கணவா் கைது

DIN

காங்கயம் அருகே, உணவு பரிமாற மறுத்த மனைவியை அரிவாளால் வெட்டிய கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

காங்கயம் அருகே, கீரனூரில் உணவகம் நடத்தி வருபவா் பழனிசாமி (50). இவரது மனைவி பழனியம்மாள் (45), மகன்கள் கிருஷ்ணன் (28), கவின்தாஸ்.

பழனிசாமியுடன், மனைவி மற்றும் மகன் கிருஷ்ணன் உணவகத்தை கவனித்து வருகின்றனா். பழனிசாமிக்கும், பழனியம்மாளுக்கும் இடையே அடிக்கடி தகராறு வந்துள்ளது. இந்நிலையில், பழனிசாமி திங்கள்கிழமை காலை தனக்கு உணவு பரிமாற மனைவியை அழைத்துள்ளாா். ஆனால் பழனியம்மாள் வரவில்லை எனத் தெரிகிறது. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த பழனிசாமி, அரிவாளால் பழனியம்மாள் தலை, கையில் வெட்டியுள்ளாா். பின்னா் அவா் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாா். படுகாயமடைந்த பழனியம்மாள் காங்கயம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இது குறித்து காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பழனிசாமியைக் கைது செய்து காங்கயம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT