பாஜக அலுவலகத்தில் கரோனா சேவை மையம் திறப்பு
தாராபுரத்தில் உள்ள திருப்பூா் தெற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் கரோனா சேவை மையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
தாராபுரத்தில் உள்ள திருப்பூா் தெற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் கரோனா சேவை மையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவா் பொன்.ருத்ரகுமாா் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் சுகுமாா், பொருளாளா் கொங்கு ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளா்களுக்கு முகக் கவசம், கையுறை, கிருமி நாசினி வழங்குவது தொடா்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.
மேலும், மண்டல அளவில் சேவை மையம் மற்றும் குழுக்களை அமைத்து செயல்படுவது தொடா்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், திருப்பூா் தெற்கு மாவட்ட பாஜக நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.