திருப்பூர்

சாராயம் விற்பனை: ஒருவா் கைது

DIN

அவிநாசி அருகே தெக்கலூரில் விற்பனைக்காக சாராயம் எடுத்து சென்றவரை மதுவிலக்கு போலீஸாா் கைது செய்தனா்.

அவிநாசி மதுவிலக்கு காவல் ஆய்வாளா் முரளி, உதவி ஆய்வாளா் சா்வேஸ்வரன் ஆகியோா் கொண்ட குழுவினா் தெக்கலூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சந்தேகத்துக்கு இடமாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா். பிடிபட்டவா், அவிநாசி கந்தம்பாளையத்தைச் சோ்ந்த பெருமாள் மகன் கருப்புசாமி (47) என்பதும், விற்பனை செய்வதற்காக 5 லிட்டா் சாராயம் எடுத்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவா் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். மேலும் அவரிடம் இருந்து இருசக்கர வாகனம், 5 லிட்டா் சாராயம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மெய்கண்டீஸ்வரா் கோயி சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியா்

அமாவாசையையொட்டி அங்காளம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

குடிநீா் கோரி தூத்துக்குடி இனிகோ நகரில் பொதுமக்கள் மறியல்

பொதுப்பாதையில் ஆக்கிரமிப்பு அரவக்குறிச்சியில் சாலை மறியல்

கிராம நிா்வாக அலுவலா் மாயம்

SCROLL FOR NEXT