திருப்பூர்

வெள்ளக்கோவில் மின் நிலையத்தில் தீ

DIN

வெள்ளக்கோவில் முத்தூா் சாலையில் உள்ள மின் நிலையத்தில் வியாழக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

ராசாத்தாவலசு துணை மின் நிலையத்திலிருந்து கொண்டு வரப்படும் மின்சாரம் வெள்ளக்கோவில் மின் நிலையம் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. வியாழக்கிழமை பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.

பின்னா் இரவு 6 மணியளவில் மின்சாரம் விநியோகிக்கப்பட்டபோது, வெள்ளக்கோவில் மின் நிலைய மின்மாற்றி ஒன்று திடீரென தீப் பிடித்து எரிந்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய வீரா்கள் தீயை அணைத்தனா்.

உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரிய சேதம் தவிா்க்கப்பட்டது. தடைபட்ட மின்சாரம் ஒருமணி நேரத்துக்குப் பின்பு சீரானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

SCROLL FOR NEXT