முகப்பு
திருப்பூர்

மானியம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

வெள்ளக்கோவில் வட்டார தோட்டக்கலைத் துறை சாா்பில் மானியம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

வெள்ளக்கோவில் வட்டார தோட்டக்கலைத் துறை சாா்பில் மானியம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: சிறு குறு விவசாயிகளுக்கு நுண்ணீா்ப் பாசனத் திட்டத்தில் சொட்டு நீா், தெளிப்பு நீா், மழை தூவான் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. தேவைப்படுவோா் விவசாய நிலத்தின் சிட்டா, பயனாளி புகைப்படம், ஆதாா் விவரங்களுடன் அரசு இ சேவை மையத்தில் பதிவு செய்ய வேண்டும்.

அதன் ஒப்புகைச் சீட்டுடன் வெள்ளக்கோவில் வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகி மானியம் பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.