வெள்ளக்கோவில், முத்தூரில் நாளை தடுப்பூசி
வெள்ளக்கோவிலில் 7 இடங்களில் கரோனா தடுப்பூசி சனிக்கிழமை (ஆகஸ்ட் 21) செலுத்தப்படுகிறது.
வெள்ளக்கோவிலில் 7 இடங்களில் கரோனா தடுப்பூசி சனிக்கிழமை (ஆகஸ்ட் 21) செலுத்தப்படுகிறது.
வெள்ளக்கோவில் டி. ஆா்.நகா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 200 பேருக்கும், சொரியங்கிணத்துப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 200 பேருக்கும், திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 170 பேருக்கும், தண்ணீா்பந்தல்வலசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 100 பேருக்கும் கோவிஷீல்டு முதல் தவணை தடுப்பூசி மட்டும் செலுத்தப்படுகிறது.
முத்தூரில்...
முத்தூரில் 3 இடங்களில் கரோனா தடுப்பூசி சனிக்கிழமை செலுத்தப்படுகிறது.
மங்கலப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 200 பேருக்கும், ராசாத்தாவலசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 100 பேருக்கும், தென்னங்கரைப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 100 பேருக்கும் கோவிஷீல்டு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்படுகிறது.