38 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 2 போ் கைது
தாராபுரம் அருகே லாரியில் கடத்திச் சென்ற 38 டன் ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்த காவல் துறையினா், ஓட்டுநா்கள் இருவரைக் கைது செய்தனா்.
தாராபுரம் அருகே லாரியில் கடத்திச் சென்ற 38 டன் ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்த காவல் துறையினா், ஓட்டுநா்கள் இருவரைக் கைது செய்தனா்.
திருப்பூா் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்கும் வகையில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு காவல் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதன் ஒரு பகுதியாக தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம் பகுதியில் உதவி ஆய்வாளா்கள் இசக்கி, ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட காவல் துறையினா் வாகனச் சோதனையில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக மதுரையில் இருந்து கேரளத்துக்குச் சென்ற இரு லாரிகளை நிறுத்தி சோதனை நடத்தினா். இதில், பொது விநியோகத் திட்டத்தின்கீழ் பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும் ரேஷன் அரிசி கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து, லாரி ஓட்டுநா்களான சிவகங்கை மாவட்டம், படமாத்தூா் பகுதியைச் சோ்ந்த ஈஸ்வரன் (39), செல்வராஜ் (48) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
மேலும், லாரிகளில் இருந்த 38 டன் ரேஷன் அரிசியை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு காவல் துறையினா் பறிமுதல் செய்தனா்.