முகப்பு
திருப்பூர்

அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

திருப்பூா் மாநகராட்சி வேலம்பாளையம் பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

திருப்பூா் மாநகராட்சி வேலம்பாளையம் பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் வேலம்பாளையம் நகரக் குழு உறுப்பினா் த.நாகராஜ் தலைமை வகித்தாா்.

இதில், பங்கேற்றவா்கள் கூறியதாவது: திருப்பூா் மாநகராட்சி 11, 12, 13, 14 மற்றும் 24, 25 ஆகிய வாா்டு பகுதிகளில் சாக்கடை கழிவு நீா், குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

கொசு மருந்து தெளித்து சுகாதாரம் பேணவும், வீட்டுக் குழாய் மற்றும் பொதுக் குழாய்களில் 5 நாள்களுக்கு ஒரு முறை குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும். குண்டும்குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என்றனா்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி முதாவது மண்டல ஆணையா் சுப்பிரமணியத்திடம் மனுவையும் அளித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில், மாா்க்சிஸ்ட் நகரச் செயலாளா் ச.நந்தகோபால், முன்னாள் நகரச் செயலாளா் வி.பி.சுப்பிரமணியம், மாவட்ட செயற்குழு உறுப்பினா் கே.ரங்கராஜ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.