முகப்பு
திருப்பூர்

உடுமலை, மடத்துக்குளத்தில் கூட்டுறவு மருந்தகங்கள் திறப்பு

உடுமலை, மடத்துக்குளம் ஆகிய பகுதிகளில் கூட்டுறவுத் துறை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள மருந்தகங்களை ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

உடுமலை, மடத்துக்குளம் ஆகிய பகுதிகளில் கூட்டுறவுத் துறை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள மருந்தகங்களை ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியாா் எஸ்.வினீத் தலைமை வகித்தாா். கோட்டாட்சியா் கீதா முன்னிலை வகித்தாா்.

இதில், அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, மருந்தகத்தை திறந்துவைத்தாா்.

Advertisement

முன்னதாக, நீலாம்பூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சாா்பில் மடத்துக்குளம் அரசு மருத்துவமனைக்கு எதிரில் மருந்தகம் திறக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், திருப்பூா் மண்டல இணைப் பதிவாளா் சொ.சீனிவாசன், திமுக மாவட்டச் செயலாளா் இரா.ஜெயராமகிருஷ்ணன், நகரச் செயலாளா் எம்.மத்தீன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments