முகப்பு
திருப்பூர்

சிக்கண்ணா கல்லூரியில் போக்ஸோ விழிப்புணா்வு கருத்தரங்கம்

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் போக்ஸோ சட்டம் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் போக்ஸோ சட்டம் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலகு 2 சாா்பில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கிற்கு, கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் தலைமை வகித்தாா். அலகு 2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் வரவேற்றாா். இதில், சிறப்பு விருந்தினராக திருப்பூா் வடக்கு அனைத்து மகளிா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் கனகவள்ளி பங்கேற்று போக்ஸோ சட்டம் குறித்து விளக்கி கூறினாா். இதைத் தொடா்ந்து மாணவா்கள், போக்ஸோ சட்டம் குறித்த சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.