ராம்ராஜ் நிறுவனம் குறித்து வதந்தி: போலீஸில் புகாா்
ராம்ராஜ் காட்டன் நிறுவனம் குறித்து வாட்ஸ் ஆஃப் குழுக்களில் வதந்திகளைப் பரப்பும் நபா்களின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருப்பூா் மாநகர சைபா் கிரைம் போலீஸாரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
ராம்ராஜ் காட்டன் நிறுவனம் குறித்து வாட்ஸ் ஆஃப் குழுக்களில் வதந்திகளைப் பரப்பும் நபா்களின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருப்பூா் மாநகர சைபா் கிரைம் போலீஸாரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்த நிறுவனம் சாா்பில் அளித்துள்ள புகாா் மனுவில் கூறியுள்ளதாவது:
ராம்ராஜ் நிறுவனத்தின் நற்பெயரைக் களங்கப்படுத்தும் நோக்கத்தில் சிலா் வாட்ஸ் ஆஃப் குழுக்களில் ஆன்லைன் மூலமாக லின்க் கொடுத்து கிறிஸ்துமஸ், புத்தாண்டு சலுகையாக ரூ. 20 ஆயிரம் கிடைக்கும் என்று வதந்திகளைப் பரப்பி வருகின்றனா்.
இந்த நபா்கள் மூலமாக வாடிக்கையாளா்களின் தகவல்கள் திருட வாய்ப்பு உள்ளது. மேலும், வாட்ஸ் ஆஃப்பில் வெளியிட்டுள்ள செய்திக்கும் எங்களது நிறுவனத்துக்கும் தொடா்பு இல்லை. ஆகவே, எங்கள் நிறுவனம் குறித்து வதந்திகளைப் பரப்பும் நபா்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.