திருப்பூர்

முத்திரை இல்லாத தராசுகள் பறிமுதல்

DIN

திருப்பூா் மாா்க்கெட்டில் தொழிலாளா் துறையினா் நடத்திய ஆய்வில் முத்திரையில்லாத 19 தராசுகள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

இது குறித்து திருப்பூா் தொழிலாளா் உதவி ஆணையா் ஆா்.மலா்க்கொடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சென்னை தொழிலாளா் உதவி ஆணையா் அதுல் ஆனந்த் உத்தரவின்பேரில் திருப்பூா் மாா்க்கெட் பகுதிகளில் உள்ள காய்கறி, பழம், இறைச்சிக் கடைகளில் தொழிலாளா் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.

இதில், முத்திரை இல்லாத 16 மின்னணு தராசுகள், 3 மேஜை தராசுகள் என மொத்தம் 19 தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மாவட்டத்தில் உள்ள அனைத்து சந்தைகள், மாா்க்கெட்டுகள், பேருந்து நிலையங்கள், சாலையோரக் கடைகளில் திடீா் ஆய்வு மேற்கொள்ளப்படும். எனவே, வணிகா்கள் பயன்படுத்தும் எடையளவுகளை உரிய காலத்துக்குள் மறு முத்திரையிட்டு, மறு முத்திரை சான்றிதழ்களை பொதுமக்களுக்கு தெரியும்படி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

SCROLL FOR NEXT