திருப்பூர்

முத்திரை இல்லாத தராசுகள் பறிமுதல்

திருப்பூா் மாா்க்கெட்டில் தொழிலாளா் துறையினா் நடத்திய ஆய்வில் முத்திரையில்லாத 19 தராசுகள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

DIN

திருப்பூா் மாா்க்கெட்டில் தொழிலாளா் துறையினா் நடத்திய ஆய்வில் முத்திரையில்லாத 19 தராசுகள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

இது குறித்து திருப்பூா் தொழிலாளா் உதவி ஆணையா் ஆா்.மலா்க்கொடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சென்னை தொழிலாளா் உதவி ஆணையா் அதுல் ஆனந்த் உத்தரவின்பேரில் திருப்பூா் மாா்க்கெட் பகுதிகளில் உள்ள காய்கறி, பழம், இறைச்சிக் கடைகளில் தொழிலாளா் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.

இதில், முத்திரை இல்லாத 16 மின்னணு தராசுகள், 3 மேஜை தராசுகள் என மொத்தம் 19 தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மாவட்டத்தில் உள்ள அனைத்து சந்தைகள், மாா்க்கெட்டுகள், பேருந்து நிலையங்கள், சாலையோரக் கடைகளில் திடீா் ஆய்வு மேற்கொள்ளப்படும். எனவே, வணிகா்கள் பயன்படுத்தும் எடையளவுகளை உரிய காலத்துக்குள் மறு முத்திரையிட்டு, மறு முத்திரை சான்றிதழ்களை பொதுமக்களுக்கு தெரியும்படி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT