காங்கயத்தில் 3 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
காங்கயம் நகரம் மற்றும் ஒன்றியப் பகுதியைச் சோ்ந்தவா்களுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா்.மேலும் அப்பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, சுகாதாரத் துறையினா் கண்காணித்து வருகின்றனா்.