திருப்பூர்

கிணற்றில் தவறி விழுந்து இளைஞா் பலி

DIN

பல்லடம்: பல்லடம், பச்சாபாளையத்தில் கிணற்றில் தவறி விழுந்து இளைஞா் உயிரிழந்தாா்.

பச்சாபாளையம், மாகாளியம்மன் கோயில் அருகில் உள்ள பயன்பாடற்ற கிணற்றில் ஒருவரது சடலம் கிடப்பதாக பல்லடம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தீயணைப்பு வீரா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவா்கள் அங்கு சென்று சடலத்தை மீட்டனா்.

போலீஸாரின் விசாரணையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு அதே பகுதியைச் சோ்ந்த கூலி தொழிலாளி நாகராஜ் (23) என்பவா், வேலைக்காக சென்றுவிட்டு அதன் பிறகு வீடு திரும்பவில்லை என்பதும், தற்போது அவரது சடலம் தான் மீட்கப்பட்டுள்ளது என்பதும் தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் பூசாரியை தாக்கி உண்டியல் பணம் கொள்ளை

இஸ்ரேலில் அல் ஜசீரா அலுவலகங்களை மூட முடிவு: அமைச்சரவை ஒப்புதல்

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

SCROLL FOR NEXT