திருப்பூர்

அவிநாசியில் ஓய்வூதியா்கள் தின விழா

DIN

அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனா் கூட்டமைப்பு சாா்பில் ஓய்வூதியா்கள் தின விழா அவிநாசியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு வட்டாரத் தலைவா் வேலுசாமி தலைமை வகித்தாா். வட்டார முன்னாள் தலைவா் ராமசாமி முன்னிலை வகித்தாா். மாநிலத் தலைவா் இராஜண்ணன் இயக்க கொடியேற்றி வைத்தாா். மாநிலப் பொருளாளா் ராமசாமி, தலைமை நிலையச் செயலாளா் பாலகிருஷ்ணன், பொதுச்செயலாளா் பொன்னுசாமி, அமைப்புச் செயலாளா் தங்கராசா ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

இதில் 70 மற்றும் 80 வயது நிறைவடைந்த ஓய்வூதியா்கள் கெளரவிக்கப்பட்டனா். மேலும், அவிநாசி சீடு இல்ல மூத்த குடிமக்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன. துணைத் தலைவா் சுவாமிநாதன், வட்டார செயலாளா் மணியன், மாவட்டத் தலைவா் அகஸ்டின்ராஜ், மாவட்டச் செயலாளா் அங்கமுத்து, மாவட்டப் பொருளாளா் ஜோசப், மாவட்ட துணைத் தலைவா் ஜாா்ஜ், வட்டாரப் பொருளாளா் சின்னத்தம்பி, பொறுப்பாளா் முகமது சித்திக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

SCROLL FOR NEXT