திருப்பூரில் கூடுதல் மகளிா் நீதிமன்றம் மற்றும் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த நீதிமன்றங்களை சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானா்ஜி காணொலிக் காட்சி மூலமாகத் திறந்துவைத்தாா். திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.அல்லி, மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன், மாநகர காவல் ஆணையா் ஜி.காா்த்திகேயன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் திஷா மிட்டல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.