கரோனா விதிமீறல்கள் குறித்து ஆய்வு
வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் கரோனா விதிமீறல்கள் குறித்து அதிகாரிகள் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் கரோனா விதிமீறல்கள் குறித்து அதிகாரிகள் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
நாட்டில் கரோனா இரண்டாவது அலை படிப்படியாகக் குறைந்த நிலையில், மூன்றாவது அலை வராமல் தடுக்கும் வழிமுறைகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. திருப்பூா் மாவட்ட சிறப்பு ஐஏஎஸ் அதிகாரி அக்தாப் ரசூல் முத்தூா் பகுதியில் புறக்காவல் நிலையத்தில் கரோனா பரிசோதனைப் பணி, உணவகங்களில் உணவு தயாரிப்பு, கடைகள், வா்த்தக நிறுவனங்களில் முகக் கவசப் பயன்பாடு, சுகாதார வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது முகக் கவசம் அணியாத 11 பேருக்குத் தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது பேரூராட்சி செயல் அலுவலா் வே.முருகன், முத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் பிரசாத்தாமரைக்கண்ணன், கிராம நிா்வாக அலுவலா் இந்திரா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.