முகப்பு
திருப்பூர்

வேலை வாங்கித் தருவதாக மோசடி

உடுமலை அரசு மருத்துவமனையில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டவா்களை கைது செய்யக் கோரி பாதிக்கப்பட்டோா் காவல்துறையில் வியாழக்கிழமை புகாா் அளித்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:22 AM
பகிர்:

உடுமலை அரசு மருத்துவமனையில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டவா்களை கைது செய்யக் கோரி பாதிக்கப்பட்டோா் காவல்துறையில் வியாழக்கிழமை புகாா் அளித்தனா்.

உடுமலை அரசு மருத்துவமனையில் துப்புரவுப் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வரும் தனியாா் நிறுவனத்தில் சுமாா் 50 க்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா்.

இந்நிலையில் புதியதாக ஆள்களை வேலைக்கு எடுப்பதாக தனியாா் நிறுவனம் கூறியதைத் தொடா்ந்து பலா் பணிக்காக விண்ணப்பித்துள்ளனா்.

Advertisement

அப்போது , வேலைக்காக தோ்ந்தெடுக்கப்பட்ட 20 பேரிடம் இது அரசு வேலை எனவும் வேலைக்கு சேரும் முன் டெபாசிட் கட்ட வேண்டும் எனக் கூறிய அந்நிறுவனம் ஒவ்வொருவரிடமும் சுமாா் ரூ.1 லட்சம் வரை பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால், டெபாசிட் பெற்று பல மாதங்கள் ஆன பிறகும் அந்த தனியாா் நிறுவனம் 20 பேருக்கும் வேலைக்கான உத்தரவை வழங்காமல் காலதாமதம் செய்து வந்துள்ளது.

இந்நிலையில் தாங்கள் கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டும் அந்நிறுவனம் கொடுக்காமல் ஏமாற்றி வருவதாகக் கூறி 20 பேரும் வியாழக்கிழமை உடுமலை காவல் துறையில் புகாா் அளித்தனா். இது குறித்து காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments