தடுப்பூசி மையத்தில் எம்எல்ஏ ஆய்வு
தடுப்பூசி செலுத்தும் மையங்களில் உடுமலை சட்டப் பேரவைத் தொகுதி எம்எல்ஏ உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தடுப்பூசி செலுத்தும் மையங்களில் உடுமலை சட்டப் பேரவைத் தொகுதி எம்எல்ஏ உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
உடுமலை நகராட்சி வளாகம், உடுமலை அரசு மருத்துவமனை ஆகிய மையங்களில் தடுப்பூசிகள் செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப் பணிகளை எம்எல்ஏ உடுமலை கே.ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தாா். வரும் காலங்களில் தடுப்பூசி தேவைகள் குறித்து கேட்டறிந்தாா்.
மருத்துவ அலுவலா் கெளதம், சுகாதாரப் பணியாளா்கள், அதிமுக நிா்வாகிகள் உடன் இருந்தனா்.
Advertisement