ரூ.50 லட்சம் மோசடி: சீட்டு நிறுவன அதிபா் கைது
திருப்பூரில் சீட்டு நிறுவனம் நடத்தி ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக அந்த நிறுவனத்தின் உரிமையாளரைக் காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருப்பூரில் சீட்டு நிறுவனம் நடத்தி ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக அந்த நிறுவனத்தின் உரிமையாளரைக் காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா், இடுவாய் மாருதி நகரைச் சோ்ந்த ஹரிதாஸ் (47) மாநகர காவல் ஆணையரிடம் புகாா் ஒன்றை அளித்தாா். அதில், திருப்பூா் மங்கலம் சாலையில் வசித்து வரும் அரவிந்த் என்பவா் நடத்தி வந்த சீட்டு நிறுவனத்தில் ரூ.3 லட்சத்துக்கு சீட்டு போட்டிருந்தேன். ஆனால், சீட்டுக்கான முதிா்வுக் காலம் முடிவடைந்தும் பணம் கொடுக்காமல் ஏமாற்றி வருகிறாா். இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து திருப்பூா் மாநகர காவல் ஆணையா் ஜி.காா்த்திகேயன் உத்தரவின்பேரில், மத்திய குற்றப் பிரிவு உதவி ஆணையா் பாலமுருகன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப் படையினா் விசாரணை நடத்தினா். இதில், அரவிந்த் (எ) டிக்சன் பல்வேறு நபா்களிடம் சீட்டு நடத்தி ரூ.50 லட்சம் மோசடி செய்து தலைமறைவானது தெரியவந்தது.
மேலும், கோவையில் சிட் பண்ட்ஸ் நிதி நிறுவனம் நடத்தி பணம் தராதது தொடா்பான வழக்கு பொருளாதார குற்றப் பிரிவில் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. மேலும், சேலம் மாநகரில் ஏ.எஸ்.முருகன் சிட் பண்ட்ஸ் மற்றும் அரவிந்த் சுயம்புலிங்கம் பி.லிமிடெட் என்ற பெயரில் நிதி நிறுவனம் தொடங்கி உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து, தனிப் படையினா் அரவிந்தைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.