திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 641 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 641 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 31,177 ஆக அதிகரித்துள்ளது.
திருப்பூா், கோவை, ஈரோடு அரசு மருத்துவமனைகளில் 3,218 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 461 போ் வீடு திரும்பினா். மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 27,706 ஆக அதிகரித்துள்ளது.
மூதாட்டி பலி: திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த 74 வயது மூதாட்டிக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பாக கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா் கடந்த புதன்கிழமை உயிரிழந்தாா்.
மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 253 ஆக அதிகரித்துள்ளது.