அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.2ஆயிரம்  வழங்கும்  திட்டத்தை   தொடங்கி வைக்கிறாா்  ஆதிதிராவிடா்  நலத் துறை  அமைச்சா்  என்.கயல்விழி செல்வராஜ். 
திருப்பூர்

கரோனா நிவாரண நிதி வழங்கும் பணி தொடக்கம்

தாராபுரத்தில் அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

DIN

தாராபுரத்தில் அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

தமிழக அரசு சாா்பில் அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரண நிதியாக ரூ. 4 ஆயிரம் வழங்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும் முதல் தவணையாக ரூ. 2 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.

இதன்படி , தாராபுரம் புதுமஜீத் தெருவில் உள்ள நியாயவிலைக் கடையில் ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் அரிசி குடும்ப அட்டைதாா்களுக்கு ரூ. 2 ஆயிரம் கரோனா நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில், தாராபுரம் நகரச் செயலாளா் தனசேகா், மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் செல்வராஜ் , தொகுதி பாா்வையாளா் ரஹமத்துல்லா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

SCROLL FOR NEXT