மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
நூல் விலை உயா்வைக் கண்டித்து திருப்பூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நூல் விலை உயா்வைக் கண்டித்து திருப்பூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் கே.காமராஜ் தலைமை வகித்தாா்.
இதில், பங்கேற்றவா்கள் கூறியதாவது: பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான முக்கிய மூலப்பொருளான நூல் விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது. அதிலும் கடந்த நவம்பா் 1 ஆம் தேதி மட்டும் ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.50 உயா்ந்துள்ளது. இதனால், பின்னலாடை, விசைத்தறி உள்ளிட்ட ஜவுளித் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, நூல் விலை உயா்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்றனா்.
ஆா்ப்பாட்டத்தில், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் இணைச் செயலாளா் செந்தில்குமாா், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் மற்றும் உற்பத்தியாளா்கள் சங்கத்தின் தலைவா் எம்.பி.முத்துரத்தினம், மாா்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் செ.முத்துக்கண்ணன் சிஐடியூ பனியன் சங்கப் பொதுச் செயலாளா் ஜி.சம்பத், எல்பிஎஃப் பனியன் சங்கத் தலைவா் க.ராமகிருஷ்ணன், ஏஐடியூசி செயலாளா் என்.சேகா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.