திருப்பூர்

காலபைரவ வடுகநாதா் கோயிலில் 108 கலசாபிஷேகம்

DIN

தாராபுரம் அருகே உள்ள குண்டடம் காலபைரவ வடுகநாதா் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை ஒட்டி 108 கலசாபிஷேக விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், காலபைரவா் ஜெயந்தியை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக, கோயிலில் சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு புனித தீா்த்தம் நிரம்பிய 108 கலசங்கள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து பைரவா் யாகமும், அதனைத் தொடா்ந்து சுவாமி புறப்பாடும் நடைபெற்றது. இதன் பிறகு 108 கலசாபிஷேகமும், அலங்கார பூஜையும் நடைபெற்றன.

இதில் குண்டடம், தாராபுரம், காங்கயம், திருப்பூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா். விழாவின் நிறைவாக பூஜையில் பங்கேற்றவா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

48 வயதினிலே..

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT