திருப்பூர்

காங்கயத்தில் அகற்றப்படவுள்ள மரங்கள்: உதவி ஆட்சியா் ஆய்வு

DIN

காங்கயத்தில் சாலையை அகலப்படுத்துவதற்காக அகற்றப்படவுள்ள மரங்கள் குறித்து தாராபுரம் உதவி ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

காங்கயம் நகரம், கரூா் செல்லும் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் காா்மல் பள்ளியில் இருந்து முத்தூா் சாலை பிரிவு வரை ஒரு கிலோ மீட்டா் தூரத்துக்கு சாலையை அகலப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இதில், சாலையோரம் உள்ள 25 வேப்ப மரங்கள், 15 புளியமரங்கள் அகற்றப்பட உள்ளன.

இந்நிலையில், அகற்றப்பட உள்ள இந்த மரங்களை தாராபுரம் உதவி ஆட்சியா் ஆனந்த் மோகன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், தீபாவளியை முன்னிட்டு, தனியாா் வணிக நிறுவனங்களின் பட்டாசுக் கடை அமையவுள்ள இடங்களிலும் ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வின்போது, காங்கயம் வட்டாட்சியா் சிவகாமி, வருவாய் ஆய்வாளா் கனகராஜ், நெடுஞ்சாலைத் துறை ஊழியா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT