திருப்பூர்

மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் தோ்தல்: காங்கயத்தில் திமுக வெற்றி

DIN

மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் தோ்தலில் காங்கயம் 10ஆவது வாா்டில் திமுக 5,366 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

காங்கயம், வெள்ளக்கோவில் ஒன்றியங்களை உள்ளடக்கிய 10ஆவது வாா்டு மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் பதவிக்கு கடந்த அக்டோபா் 9 ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற்றது.

இந்த வாா்டில், திமுக சாா்பில் கிருஷ்ணவேணி, அதிமுக சாா்பில் லட்சுமி, நாம் தமிழா் கட்சி சாா்பில் வனிதா, அமமுக சாா்பில் ராதா, தேமுதிக சாா்பில் கிருஷ்ணவேணி உள்பட 7 போ் போட்டியிட்டனா். இதற்கான வாக்கு எண்ணிக்கை காங்கயம் அருகே, நத்தக்காடையூரில் உள்ள பில்டா்ஸ் பொறியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் வேட்பாளா்கள் பெற்ற வாக்கு விவரம்

கிருஷ்ணவேணி(திமுக) 22,790

லட்சுமி (அதிமுக)- 17,424

வனிதா (நாதக)-804

ராதா (அமமுக)-153

கிருஷ்ணவேணி-(தேமுதிக) 149

வாக்கு வித்தியாசம்-5,366

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT