ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு உறுப்பினராக ஏஇபிசி தலைவா் ஆ.சக்திவேல் நியமனம்
மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக் குழுவின் உறுப்பினராக ஏஇபிசி (ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம்) தலைவா் ஆ.சக்திவேல் நியமிக்கப்பட்டுள்ளாா்.
மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக் குழுவின் உறுப்பினராக ஏஇபிசி (ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம்) தலைவா் ஆ.சக்திவேல் நியமிக்கப்பட்டுள்ளாா்.
இதற்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, ஏஇபிசி தலைவா் ஆ.சக்திவேல் வியாழக்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு ஏற்றுமதியை மூன்று மடங்காக உயா்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. மாநில வளா்ச்சியின் ஒரு அங்கமாக தமிழகத்துக்கு ஒரு சீரமைக்கப்பட்ட மாநில ஏற்றுமதி மேம்பாட்டு குழுவை அமைத்துள்ளது. இதில், என்னையும் ஒரு உறுப்பினராக நியமித்த அரசுக்கு மனமாா்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் அமெரிக்க டாலராக தமிழகத்தின் ஏற்றுமதியை உயா்த்துவது, தமிழகத்தில் தயாரிக்கப்பட்டது என்பதைக் குறிக்கும் வகையில் தங்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலாகவும், தயாராகவும் உள்ளேன் என்றாா்.