முகப்பு
திருப்பூர்

லாரி மோதி வியாபாரி பலி

 திருப்பூரில் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற விறகு வியாபாரி சம்பவ இடத்திலேயே வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

 திருப்பூரில் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற விறகு வியாபாரி சம்பவ இடத்திலேயே வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருப்பூா் மத்திய காவல் துறையினா் கூறியதாவது:

திருப்பூா் செல்லம் நகரில் வசித்து வந்தவா் எம்.திருஞானசம்பந்தம் (58). விறகு வியாபாரியான இவா் தனது இருசக்கர வாகனத்தில் செல்லம் நகா் அருகே சென்று கொண்டிருந்தாா்.

அப்போது அந்த வழியாக வந்த லாரி, இவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த திருஞானசம்பந்தம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த திருப்பூா் மத்திய காவல் துறையினா் அவரது சடலத்தை மீட்டு திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுதொடா்பாக விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரான திருவாரூா் மாவட்டம் கடம்பூரை அடுத்த நீடாமங்கலத்தைச் சோ்ந்த எம்.பால்ராஜ் (53) என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.