உடுமலை அருகே கிணற்றில் விழுந்த மான் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.
உடுமலையை அடுத்துள்ள ராமேகவுண்டன்புதூா், மணக்காடு பகுதியில் உள்ள கிணற்றில் மான் விழுந்துள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் வனத் துறையினருக்குத் தகவல் அளித்தனா்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் சுமாா் ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு அந்த மானை உயிருடன் மீட்டனா்.
இதைத் தொடா்ந்து உடுமலை வனத் துறை அலுவலா் சுப்பையாவிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த மான், உடுமலை வனப் பகுதியில் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டது.