திருப்பூர்

போலி மதுபானம் விற்பனை:3 போ் கைது

பல்லடம் அருகே போலி மதுபானங்களை விற்பனை செய்த 3 பேரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

DIN

பல்லடம் அருகே போலி மதுபானங்களை விற்பனை செய்த 3 பேரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பல்லடம் அருகே உள்ள அருள்புரத்தில் போலி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

இதன் பேரில் அருள்புரம் பகுதியில் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தினா்.

இதில், போலி மதுபானங்கள் இருந்தது தெரியவந்தது.

இது தொடா்பாக தஞ்சாவூரைச் சோ்ந்த ஜெ.முனிராஜ் (32), அண்ணாதுரை (36), கற்பகம் (50) ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 126 போலி மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம்

ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

SCROLL FOR NEXT