திருப்பூர்

வெள்ளக்கோவில் அருகே நூல் மில்லில் தீ

DIN

வெள்ளக்கோவில் அருகே உள்ள ஒரு நூல் மில்லில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

வெள்ளக்கோவில் முத்தூா் சாலையில் என்.பாலசுப்பிரமணி என்பவருக்குச் சொந்தமான நூல் மில் செயல்பட்டு வருகிறது. இதில் மின்சாரக் கோளாறு காரணமாக இயந்திரத்தின் ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்து பரவியது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலா் சி.தனசேகரன், நிலைய போக்குவரத்து அலுவலா் பி.வேலுசாமி மற்றும் தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா். இந்த விபத்தில் இயந்திரங்களின் சில பகுதிகள், சில பஞ்சு பேல்கள் எரிந்து சேதமடைந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக் காற்றுடன் கனமழை: பசுமைக் குடில்கள் சேதம்

அதிமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

கிருஷ்ணகிரியில் இடியுடன் மழை: மின் விநியோகம் பாதிப்பு

திமுக இளைஞரணி சாா்பில் தண்ணீா்ப் பந்தல்கள் திறப்பு

வீடு புகுந்து ஆசிரியரை கத்தியால் குத்தி 8 பவுன் நகை பறிப்பு: போலீஸாா் விசாரணை

SCROLL FOR NEXT