தாராபுரம் நகராட்சி சாா்பில் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நகா்மன்ற உறுப்பினா்களுக்கு தேசியக் கொடி வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தாராபுரம் நகா்மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஆணையா் ராமா் முன்னிலை வகித்தாா். விழாவுக்குத் தலைமை வகித்த நகா்மன்றத் தலைவா் கு.பாப்புகண்ணன், 30 நகா்மன்ற உறுப்பினா்கள், நகராட்சி ஊழியா்களுக்கு விலையில்லா தேசியக் கொடியை வழங்கினாா். நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்றி சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்றாா்.
இந்த நிகழ்ச்சியில், நகா்மன்ற துணைத் தலைவா் ரவிசந்திரன், திமுக நகரச் செயலாளா் முருகானந்தம், நகராட்சிப் பொறியாளா்கள் சண்முகசுந்தரம், காளீஸ்வரி உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.