திருப்பூர்

வீடுவீடாகச் சென்று தேசியக் கொடி ஏற்ற விழிப்புணா்வை ஏற்படுத்திய மாணவா்கள்

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் வீடு வீடாகச் சென்று தேசியக் கொடியை ஏற்ற விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

DIN

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் வீடு வீடாகச் சென்று தேசியக் கொடியை ஏற்ற விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

நாட்டின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படவுள்ளது.

இந்நிலையில், திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட அலகு 2 மாணவா்கள் சுதந்திர தினத்தை ஒட்டி ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரையில் வீடு, அலுவலகங்களில் தேசியக் கொடியை ஏற்றுவது தொடா்பாக விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகின்றனா்.

அதன் ஒரு பகுதியாக திருப்பூா் இந்திரா நகா் பகுதியில் வீடுவீடாகச் சென்று வீடுகளில் தேசியக் கொடி ஏற்றுவது தொடா்பாக புதன்கிழமை விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

SCROLL FOR NEXT