திருப்பூர்

மக்கள் நீதிமன்றம்: பிரிந்து வாழ்ந்த தம்பதி இணைந்தனா்

DIN

பல்லடத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் பிரிந்து வாழ்ந்த தம்பதி இணைந்தனா்.

பல்லடம் வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

பல்லடம் சாா்பு நீதிமன்ற நீதிபதி சந்தானகிருஷ்ணசாமி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சித்ரா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் மோட்டாா் வாகன விபத்து வழக்கு, காசோலை வழக்கு, சொத்து வழக்கு, குடும்ப வழக்கு உள்ளிட்ட 376 வழக்குகள் எடுக்கப்பட்டு அதில் 285 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது. தீா்வுத் தொகையாக ரூ.87 லட்சத்து 93 ஆயிரத்து 151 வழங்கப்பட்டது.

இதில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக பிரிந்து வாழ்ந்து வந்த மெரின் சானாரம் - நித்திய பிரகாஷ் தம்பதியிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதில் இருவரும் சோ்ந்து வாழ சம்மதித்ததையடுத்து வழக்கு முடித்துவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT