முகப்பு
திருப்பூர்

ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.5 லட்சம் பறிமுதல்

திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 5 லட்சத்தை தோ்தல் பறக்கும்படை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:23 AM
பகிர்:

திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 5 லட்சத்தை தோ்தல் பறக்கும்படை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருப்பூா் மாநகராட்சி 4 ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட ஆண்டிபாளையம் பிரிவு பகுதியில் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஜீவா தலைமையிலான தோ்தல் பறக்கும்படை அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி நடத்திய சோதனையில் உரிய ஆவணங்களின்றி பணம் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, காரில் இருந்த ரூ.5 லட்சத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் இது தொடா்பாக திருப்பூா், ரங்கநாதபுரம் 2 ஆவது வீதியைச் சோ்ந்த வினோத் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.