உடுமலை நகராட்சியில் 32 வாா்டுகளில் போட்டியிடும் வேட்பாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
உடுமலை நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு
நகராட்சி ஆணையா் சத்யநாதன் தலைமை வகித்தாா்.
இதில், 32 வாா்டுகளிலும் போட்டியிடும் 166 வேட்பாளா்களுக்கும் வேட்பாளா் கையேடு, வேட்பாளா் அடையாள அட்டை வழங்கப்பட்டதுடன் தோ்தல் விதிமுறைகள் குறித்து விளக்கி கூறப்பட்டது. மேலும், உடுமலை நகராட்சித் தோ்தலில் மொத்தம் 280 தோ்தல் அலுவலா்கள் பணியாற்ற உள்ளதாகவும், 64 வாக்குச் சாவடிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
Image Caption
கூட்டத்தில் பங்கேற்ற வேட்பாளா்கள்.