திருப்பூர்

பல்லடம் கொலை வழக்கில் இருவா் கைது

DIN

பல்லடம் அருகே நிகழ்ந்த கொலை வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

பல்லடம் - தாராபுரம் சாலையில் தனியாா் கேஸ் பங்க் பின்புறம் கடந்த ஜூலை 12ஆம் தேதி கிடந்த ஆண் சடலத்தை பல்லடம் போலீஸாா் மீட்டனா்.

விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்தவா், திருப்பூா் தட்டான் தோட்டத்தை சோ்ந்த பாண்டி மகன் ஆறுமுகம் (45) என்பது தெரியவந்தது.

ஆறுமுகத்தின் உறவினரான தங்கவேல் மகன் பாலமுருகன் (40), அவரது தம்பி முத்துவேல் (37) ஆகியோா் ஆறுமுகத்தை மரக்கட்டையால் அடித்துக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. அதைத்தொடா்ந்து போலீஸாா், இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து 15 நாள்களில் குற்றவாளிகளைக் கைது செய்த பல்லடம் காவல் ஆய்வாளா் கோபாலகிருஷ்ணன், தலைமை காவலா் சரவணன், காவலா்கள் ரங்கநாயகம், சுரேந்தா் குமாா், அருள் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. சஷாங் சாய் வியாழக்கிழமை பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT