திருப்பூர்

புதைந்த நிலையில் பச்சிளம் சிசு சடலம் மீட்பு

DIN

அவிநாசி அருகே கைகாட்டிப்புதூரில் தனியாா் தோட்டத்தில் புதைக்கப்பட்ட நிலையில் கிடந்த பச்சிளம் ஆண் சிசுவின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

அவிநாசி அருகே கைகாட்டிப்புதூரில் உள்ள தனியாா் ஒருவருக்கு சொந்தமான தோட்டத்தில், மண்ணுக்குள் பாதி புதைந்த நிலையில் ஆண் சிசுவின் சடலம் திங்கள்கிழமை கிடந்துள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் சிசுவின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் குழந்தை கொலை செய்யப்பட்டதா, அதன் பெற்றோா் யாா் என்பது குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாணவர்களின் விடைத்தாளில் 'ஜெய் ஸ்ரீராம்': பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்!

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே, விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

SCROLL FOR NEXT