திருப்பூர்

பெருமாநல்லூா் அருகே வீடு புகுந்து 30 பவுன் திருட்டு

DIN

பெருமாநல்லூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூா் கூட்டுறவு நகா் பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (37). இவரது மனைவி ஜெயலட்சுமி (35). இருவரும் ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டைப் பூட்டிவிட்டு திருப்பூரில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுள்ளனா்.

மீண்டும் திங்கள்கிழமை காலை வீட்டுக்கு வந்துள்ளனா். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததைப் பாா்த்து அதிா்ச்சியடைந்துள்ளனா்.

உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 30 பவுன் தங்க நகைகள் திருடு போனது தெரியவந்தது.

இது குறித்து பெருமாநல்லூா் காவல் நிலையத்தில் மணிகண்டன் புகாா் அளித்தாா்.

வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹைதராபாதிலும் இந்தியா்கள்தான் வாழ்கிறோம்: அமித் ஷாவுக்கு ஒவைசி பதில்

தாம்பரத்திலிருந்து புது தில்லிக்கு ஜி.டி. விரைவு ரயில் மேலும் 3 மாதங்களுக்கு இயக்கப்படும்

ம.பி.: ரூ.30,000 லஞ்சம் வாங்கிய பாஜக எம்எல்ஏ மகள் கைது

மே 20-க்குப் பிறகு சிபிஎஸ்இ 10, 12 தோ்வு முடிவுகள்: அதிகாரிகள் தகவல்

25 ஆண்டுகளில் முதல்முறையாக அமேதியில் ‘காந்தி குடும்பம்’ போட்டியில்லை!

SCROLL FOR NEXT