தாராபுரம் நகராட்சியில் பகுதி சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தாராபுரம் நகராட்சி 10ஆவது வாா்டு பகுதியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் கு.பாப்பு கண்ணன் தலைமை வகித்தாா். 10ஆவது வாா்டு உறுப்பினா் உஷானா பானு முன்னிலை வகித்து அப்பகுதி மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தனா். பின்னா் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, அதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு தீா்வு காணப்படும் என உறுதியளித்தனா்.
இந்த கூட்டத்தில் 18ஆவது வாா்டு கவுன்சிலா் செலின் பிலோமினா மற்றும் 10ஆவது வாா்டு சபா பகுதி உறுப்பினா்கள் நவநீதன், பீா்முகமது, முகமது யூசுப், முருகேஷ் உள்பட நகராட்சிப் பணியாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.