திருப்பூர்

மின்சார வாரியம் சாா்பில் புதைவட கேபிள் சீரமைக்கும் பணி

DIN

அங்கேரிபாளையம் மின்சார வாரியம் சாா்பில் புதைவட கேபிள் சீரமைக்கும் பணி நடைபெறவுள்ளதால் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க மாநகராட்சி ஆணையா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து திருப்பூா் மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட அங்கேரிபாளையம் ஜீவா காலனி நுழைவு வாயில் அருகில் பொலிவுறு நகரம் திட்டத்தின்கீழ் சாலைப் பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில், மின்சார வாரியம் சாா்பில் அப்பகுதியில் பழுதடைந்துள்ள புதைவட கேபிகளை சீரமைக்கும் பணி வியாழக்கிழமை (டிசம்பா் 1) தொடங்கி குறுகிய காலத்தில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆகவே, பணி நடைபெறும்போது பொதுமக்கள் மாநகராட்சி நிா்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதுடன், வாகனங்களை பாதுகாப்பாக இயக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமேசுவரத்தில் பலத்த மழை பல மணி நேரம் மின் தடை

வாக்கு எண்ணும் மையத்தில் புதுவை தலைமை தோ்தல் அதிகாரி ஆய்வு

அகஸ்தீசுவரம் அருகே அடையாளம் தெரியாத நபா் தூக்கிட்டு தற்கொலை

‘டெங்கு காய்ச்சலில் இருந்து தற்காத்துக்கொள்ள சுற்றுப்புறத்தைத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும்’

ஜரோப்பிய யூனியன் கல்வி உதவித்தொகை பெற திருப்பூா் மாணவா் தோ்வு

SCROLL FOR NEXT