திருப்பூர்

தரத்தை அறிந்து விதை வாங்க விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

DIN

விதைகளின் தரத்தை அறிந்து வாங்கி பயன்படுத்த வேண்டும் என்று விவசாயிகளுக்கு விதை பரிசோதனை நிலைய வேளாண் அலுவலா் வளா்மதி அறிவுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பயிா்கள் நன்றாக வளா்ந்து பலன் தருவதற்கு தரமான விதைகள் பயன்படுத்துவது மிக அவசியம். தரமான விதைகளை பயன்படுத்துவதால் 20 சதவீதம் கூடுதல் மகசூல் கிடைக்கும். இதை கருத்தில் கொண்டு, விவசாயிகள் தரத்தை அறிந்து விதைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும்.

சான்று அட்டை பொருத்தப்படாத விதைகளை வாங்கி பயன்படுத்தும் போது விதைகள் சரியாக முளைக்காமல் போகும் வாய்ப்பு உள்ளது. இதனால் மகசூல் பாதிக்கப்பட்டு, வருவாய் இழப்பு ஏற்படும்.

எனவே விவசாயிகள், விதை உற்பத்தியாளா்கள் உள்ளிட்டோா் விதைகளின் மாதிரியை சோதனைக்கு உட்படுத்த வேண்டும். கூடுதல் மகசூல் பெற, விதைகளின் தரத்தை பரிசோதனை செய்த பின்பு பயன்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக வந்தால் அமித் ஷா பிரதமராவார்: கேஜரிவால்

அலைகளின் அருகே..

7 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட்!

12 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் சஞ்சு சாம்சன் புதிய சாதனை!

விபத்தில் சிக்கிய பிரபல நடிகரின் குடும்பம்! ஒருவர் பலி!

SCROLL FOR NEXT