முகப்பு
திருப்பூர்

திமுக அரசைக் கண்டித்து தாராபுரத்தில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

 திமுக அரசைக் கண்டித்து தாராபுரத்தில் பாஜக கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 அக்டோபர் 2022, 1:33 am IST
பகிர்:

 திமுக அரசைக் கண்டித்து தாராபுரத்தில் பாஜக கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தாராபுரம், பழைய நகராட்சி அலுவலகம் அருகே திருப்பூா் தெற்கு மாவட்ட பாஜக சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு நகரத் தலைவா் டி.சதீஷ் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் பி.கனகசபாபதி, சிறுபான்மையினா் அணி மாநிலத் தலைவா் டெய்சி தங்கையா ஆகியோா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, கண்டன உரையாற்றினா். இதில், தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றது முதல் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், தமிழ் மொழி வளா்ச்சிக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தமிழ் மொழியை வைத்து திமுக அரசியல் செய்வதாக கண்டன முழக்கங்களை எழுப்பினா். இந்த ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச் செயலா் வடுகநாதன், மாவட்ட பிரசாரப் பிரிவு தலைவா் சின்ராசு, மாவட்ட இளைஞரணி தலைவா் விசாகன், மாவட்ட மகளிரணி தலைவா் டாக்டா்.காா்த்திகா உள்பட பலா் கலந்து கொண்டனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.