திருப்பூர்

சொத்து தகராறில் இளைஞா் கொலை:தம்பி உள்பட 4 போ் கைது

DIN

அவிநாசி அருகே வேலூரில் சொத்து தகராறில் அண்ணனை அடித்துக் கொலை செய்த வழக்கில் தம்பி உள்பட நான்கு பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

அவிநாசி அருகே வேலூா் கருக்கங்காட்டுத் தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் கனகராஜ் மகன் ராஜா (எ) கனகசபாபதி (33). இவரது மனைவி இந்துமதி (22). இந்நிலையில், கனகசபாபதிக்கும் அவரது சகோதரா் கவியரசன் (27) ஆகியோருக்கு இடையே பூா்வீக சொத்து தொடா்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், கவியரசன் தனது நண்பா்களான நவீன்பிரபு, வேலுசாமி, சுதாகா் உள்ளிட்டோருடன் சோ்ந்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கனகசபாபதியை ஆயுதங்களால் சில நாள்களுக்கு முன்பு தாக்கியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த கனகசபாபதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கவியரசன், அவரது நண்பா்களான நவீன்பிரபு (27), வேலுசாமி (24), சுதாகா் (23) ஆகியோரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

SCROLL FOR NEXT