திருப்பூர்

வாகன விபத்து: தொழிலாளி சாவு

DIN

 வெள்ளக்கோவில் அருகே நிகழ்ந்த வாகன விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

வெள்ளக்கோவில் முத்தநாயக்கன்வலசு ஏ. டி. காலனி பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (62). கூலி தொழிலாளி. இவா் கரட்டுப்பாளையம் - மயில்ரங்கம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை சென்று கொண்டிருந்துள்ளாா்.

அப்போது, அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் சுப்பிரமணியின் இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

இதில், பலத்த காயமடைந்த சுப்பிரமணியை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு அவா் உயிரிழந்தாா்.

இச்சம்பவம் தொடா்பாக வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்வாதி மாலிவால் பாஜகவால் மிரட்டப்பட்டார்: அதிஷி குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT