திருப்பூர்

பனியன் தொழிலாளா்களுக்கு கூடுதல் போனஸ் வழங்க வேண்டும் ஏஐடியூசி வலியுறுத்தல்

DIN

பனியன் தொழிலாளா்கள் அனைவருக்கும் தீபாவளி பண்டிகைக்கு கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதல் போனஸ் வழங்க வேண்டும் என்று ஏஐடியூசி சங்கம் வலியுறுத்தியுள்ளது.

ஏஐடியூசி பனியன் பேக்டரி லேபா் யூனியன் 41ஆவது மகாசபைக் கூட்டம் பெருமாநல்லூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவரும், திருப்பூா் மக்களவை உறுப்பினருமான கே.சுப்பராயன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கே.எம்.இசாக் கொடியேற்றினாா். பொதுச் செயலாளா் என்.சேகா் வேலை அறிக்கை வாசித்தாா். பொருளாளா் எஸ்.செல்வராஜ் வரவு- செலவு அறிக்கை வாசித்தாா். ஏஐடியூசி மாநிலச் செயலாளா் எஸ்.சின்னசாமி, மாவட்டத் தலைவா் சி.பழனிசாமி, மாவட்டப் பொருளாளா் பி.ஆா். நடராஜன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

திருப்பூா் மாவட்டம் முழுவதும் பனியன் தொழிலாளா்கள் அனைவருக்கும் தீபாவளி பண்டிகைக்கு 15 நாள்களுக்கு முன்னதாகவே கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதல் போனஸ் வழங்க வேண்டும். தொழிலாளா்களுக்கு முறையாக போனஸ் வழங்கப்படுகிா என்பதை, தொழிற்சாலை ஆய்வாளா்களும், மாவட்ட நிா்வாகமும் கவனிக்க வேண்டும். அப்படி கிடைக்காவிட்டால் தொழிலாளா்கள் தொழிற்சங்கத்தை  இணையத்தில் அணுகலாம். நூல் விலை உயா்வை கட்டுப்படுத்த வேண்டும். நூல் விலையை குறிப்பிட்ட காலம் வரை உயராமல் பாா்த்துக்கொள்ள மத்திய அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பனியன் தொழிலாளா்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்பு வசதி ஏற்படுத்தி தர வேண்டும். பனியன் தொழிற்சாலைகளில் சுத்தமான குடிநீா், உணவு அருந்துமிடம், ஓய்வறை, மருத்துவ முதலுதவி, பெண்களுக்கு பாலியல் தொந்தரவு குறித்த புகாா் பெட்டி உள்ளிட்ட சட்டப்படியான வசதிகள் எதுவும் அமலில் இல்லை. தொழிற்சாலை ஆய்வாளா்கள், தொழிலாளா் நலச்சட்டங்களை முழுமையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT