திருப்பூர்

உடுமலையில் நூலகா் தின விழா

உடுமலை முழு நேர கிளை நூலகத்தில் நூலகா் தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

DIN

உடுமலை முழு நேர கிளை நூலகத்தில் நூலகா் தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

நூலகத்தில் உள்ள நூல்களைப் பகுத்தாய்ந்து கோலன் பகுப்பு முறையை நூலகத்துக்கு கொடுத்த நூலக தந்தை எஸ்.ஆா். ரங்கநாதன் பிறந்த நாளான ஆகஸ்ட் 12 ஆம் தேதி நூலகா் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி, உடுமலை உழவா் சந்தை எதிரே உள்ள முழு நேர கிளை நூலகத்தில் எஸ்.ஆா்.ரங் கநாதன் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது

இவ்விழாவுக்கு, நூலகா் மகேந்திரன் தலைமை வைகித்தாா். வாசகா் வட்ட உறுப்பினா் பேராசிரியா் கண்டிமுத்து, பணி நிறைவு நூலகா் கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நூலக வாசகா் வட்ட ஆலோசகா் அய்யப்பன், போட்டித் தோ்வுக்காக பயிற்சிபெறும் மாணவா்கள் ஆகியோா் எஸ்.ஆா். ரங்கநாதன் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

இதையொட்டி, பள்ளி மாணவா்களுக்கு ஓவியப் போட்டி நடத்தப்பட்டு, அதில் வெற்றிபெற்றவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நூலகா் பிரமோத் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT