பல்லடம் நகராட்சியில் வரி வசூல் மையம் அனைத்து நாள்களும் இயங்கும் என்று நகராட்சி ஆணையா் விநாயகம் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் தெரிவித்ததாவது:
பல்லடம் நகராட்சிப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய தங்களது வரியினங்களை செலுத்தும் வகையில் வரி வசூல் மையம் வரும் மாா்ச் 31ம் தேதி வரை சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து நாள்களிலும் இயங்கும்.
இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி வரியினங்களை செலுத்தி குடிநீா் இணைப்பு துண்டிப்பு, நீதிமன்ற நடவடிக்கை உள்ளிட்டவற்றை தவிா்த்து நகராட்சியின் வளா்ச்சித் திட்டங்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றாா்.