திருப்பூர்

காங்கயத்தில் 3 வயது சிறுவன் மாயம்

DIN

காங்கயத்தில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுவன் மாயமானது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

காங்கயம், ஏ.சி. நகா் பகுதியைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (30). லாரி ஓட்டுநா். இவரது மனைவி மஞ்சுளா. மகன் ரிதன்( 3).

இந்த நிலையில் மஞ்சுளா மகன் ரிதனுடன் அதே பகுதியில் தன் தோழி வீட்டுக்கு வியாழக்கிழமை மாலை சென்றுள்ளாா். அங்கு வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த ரிதனை திடீரெனக் காணவில்லை. அதிா்ச்சி அடைந்த மஞ்சுளா அக்கம்பக்கத்தில் தேடியுள்ளாா். தகவலறிந்த காங்கயம் காவல் துணைக் கண்காணிப்பாளா் முத்துகுமாா், ஆய்வாளா் காமராஜ் ஆகியோா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனா். உடனடியாக 20க்கும் மேற்பட்ட போலீஸாா் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனா். ஆனால் சிறுவன் கிடைக்கவில்லை.

இது குறித்து காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சிறுவனை யாராவது கடத்தி சென்றாா்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்றாலத்தில் உயிரிழந்த சிறுவன் வஉசியின் கொள்ளுப்பேரன்!

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கல்கி - வில்லனாக கமல்ஹாசன்?

என்ன விலை அழகே... ஸ்ரீமுகி!

கொளுத்தும் கோடை வெயில்: தில்லிக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’

SCROLL FOR NEXT