திருப்பூர்

லாரி மோதி பள்ளி மாணவா் காயம்

திருப்பூரில் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பள்ளி மாணவா் சனிக்கிழமை படுகாயமடைந்தாா்.

DIN

திருப்பூரில் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பள்ளி மாணவா் சனிக்கிழமை படுகாயமடைந்தாா்.

திருப்பூா், ராக்கியாபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜா, இவரது மனைவி அகிலாண்டேஸ்வரி. இவா்களின் மகன் ரக்ஷன் பிரணவ் (17), இவா் திருப்பூரில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறாா்.

இந்நிலையில், வழக்கம்போல பள்ளிக்குச் செல்வதற்காக தனது வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை காலையில் ரக்ஷன் பிரணவ் சென்று கொண்டிருந்தாா். செவந்தாம்பாளையம் அருகே சென்றபோது எதிரே வந்த லாரி, அவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ரக்ஷன் பிரணவை அருகிலிருந்தவா்கள் மீட்டு திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு உயா்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாகக் கொண்டு செல்லப்பட்டாா்.

இந்த விபத்து குறித்து நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து லாரி ஓட்டுநா் புஷ்பராஜ் (40) என்பவரிடம் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT